எண்ணங்களின் எழுத்துரு...

Monday, November 21, 2005

சில திங்கள் கடந்த பின்னர்..

முகவரியை கையில் வைத்து -என்
முன் மனையை தேடினேன் - களைத்தேன்
பள்ளம் விழுந்த வீதியில்லை - கரை
பக்கங்களில் குப்பையில்லை!

ஷெல் உடைத்த கட்டடங்கள்
சென்ற திசையெதிலுமில்லை
சொர்க்கமா இதுவென்று சொக்கிப் போனேன்!

அரைக்காற் சட்டையுடன் அன்ரிகள் நடக்க
"லிப்டிக்" கலரும் "சன்கிளாஸ்" சைனிங்கும்
கண்ணை குத்தவே முழித்தேன் - விழித்தேன்
"அட்ரசைக்" காட்டி கேட்கவும் நினைத்தேன்

எங்கும் தமிழ் பேசக் காணோம் - இது
யாழ். நகரா? இல்லை தலைநகரா?
தலைகால் புரியாது திகைத்தேன் - சலித்தேன்

நங்கையர் எல்லாம் நாகரிகமாக...
நான் மட்டும் பழமையுடன் - புரியவில்லை
யாழ்ப்பாணமா! இது முன்னேறி விட்டதே
யாருக்கும் இங்கு தமிழ் தெரியவில்லையே
வழி மாறி வந்தேனோ?
வலுவின்றிப் போனேனா?

சரியாக வந்தது....
சாலைப் பக்கமாய் சென்று
சுற்றிலும் பார்த்தேன்
ஒருத்தரும் வரவில்லை
சற்று நிம்மதியானேன்

மதிலின் பின்னிருந்து - மாயமாய்
ஓர் உருவம் சடாரென எழுந்து
"சலம் விடுவதற்கு எம்மிடம்
ஐ சி யெடுத்தாயா?......"
.....! .....! ....!

- சஞ்சீவி வார இதழ் 1999 (யாழ். இலங்கை)-

- லோகா -

0 Comments:

Post a Comment

<< Home