எண்ணங்களின் எழுத்துரு...

Monday, November 21, 2005

பாழாய்ப்போன கட்டெறும்பு

மூன்று நாட்களாய் என தம்பி
மூன்று வேளை சாப்பாட்டை
முறையாக உண்ணவில்லை
ஓரிடத்தில் அமைதியாய்
ஒதுங்கியிருக்கவில்லை
எதையோ தொலைத்தவன் போல்
சோகமாய் இருந்தனன் - காண்
எல்லோர்க்கும் உள்ளது தான் -
தம்பி என்னடா உன் கவலை
இடம்பெயர்ந்து வந்ததாலா? - உன்
நண்பர்களை பிரிந்ததாலா? - இல்லை
வீட்டுப் பொருட்களை இழந்ததாலா? -ஷெல்
வீழ்ந்து செல்வ மண்ணை அழித்ததாலா?
பதிலேதும் சொல்லாமல்
நடந்து கொண்டிருந்தனன்
நிறுத்திக் கேட்டேன்
என்னவென்று சொல்லேனடா
"பாழாய்ப்போன கட்டெறும்பு
கடிக்க வேறு இடமில்லாது
"மும்தாஜி"ன் முதுகிலே
கடித்தது" என்றான் - காண்!

-"சுடர்ஒளி" வாரஇதழ் (29.07.2001) (இலங்கை)-

-லோகா -

2 Comments:

Blogger U.P.Tharsan said...

ஆமாம் ரொம்ப முக்கியம். :-))

Tuesday, November 22, 2005 3:17:00 AM

 
Blogger LoKa said...

க க க போ..
நண்பர்களே..
கருத்துக்களை கணகச்சிதமாக கவ்வுனிறீர்கள் போங்கள்
என்றேன்!

(கண்டிப்பா வடிவேல் ஸ்டைலே தான்)

நட்புடன்
- லோகா -

Wednesday, October 04, 2006 4:25:00 PM

 

Post a Comment

<< Home