எண்ணங்களின் எழுத்துரு...

Tuesday, December 06, 2005

முத்தமிட்ட அவள்!

கண்ணடித்தாள் - தன்
இதழ் கடித்தாள்
கட்டியென்னை முத்தமிட்டாள்
சின்னச் சிரிப்பில் - எனை
சிலிர்க்க வைத்தாள்
"கண்ணே!" என்றேன்
"கனியமுதே!" என்றேன்
"என்னுயிர் நீ!" யென்றேன்
நான் செய்ய எண்ணியவை
அத்தனையும் அவள் செய்தாள்
என்ன தவம் செய்தேனோ - பெண்ணே
உன்னைப் பெறுவதற்கு!
கிளிச் சொண்டை திறந்து - அவள்
"குட்நைட் டாடி!" என்றாள் - ஐந்து
வயது அடையாத என்
மகள் ஆரணி...!

"சஞ்சீவீ " வார இதழ் (1999) (யாழ். இலங்கை)
"ஊசிஇலை" (2003 மார்கழி) (சுவிஸ்)

- லோகா -

3 Comments:

Blogger Chandravathanaa said...

mika azhakiya kavithai

Wednesday, March 15, 2006 5:16:00 AM

 
Blogger LoKa said...

இணைய வழி இணையும்
தங்களின் வரவு நல்வரவாகி
தொடருக கருத்துகளின் அணி!

நட்புடன்
- லோகா -

Wednesday, March 22, 2006 11:13:00 AM

 
Blogger LoKa said...

தங்களின் கவிதை ஆர்வம் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி. தொடர்ந்து வருக.
கடந்தவையில்
- மாதங்களுக்கும் -
முடிந்தால் சென்று
கவி
பருகி வருக..
நட்புடன்
-லோகா -

Wednesday, October 04, 2006 4:20:00 PM

 

Post a Comment

<< Home