முத்தமிட்ட அவள்!
கண்ணடித்தாள் - தன்
இதழ் கடித்தாள்
கட்டியென்னை முத்தமிட்டாள்
சின்னச் சிரிப்பில் - எனை
சிலிர்க்க வைத்தாள்
"கண்ணே!" என்றேன்
"கனியமுதே!" என்றேன்
"என்னுயிர் நீ!" யென்றேன்
நான் செய்ய எண்ணியவை
அத்தனையும் அவள் செய்தாள்
என்ன தவம் செய்தேனோ - பெண்ணே
உன்னைப் பெறுவதற்கு!
கிளிச் சொண்டை திறந்து - அவள்
"குட்நைட் டாடி!" என்றாள் - ஐந்து
வயது அடையாத என்
மகள் ஆரணி...!
"சஞ்சீவீ " வார இதழ் (1999) (யாழ். இலங்கை)
"ஊசிஇலை" (2003 மார்கழி) (சுவிஸ்)
- லோகா -
3 Comments:
mika azhakiya kavithai
Wednesday, March 15, 2006 5:16:00 AM
இணைய வழி இணையும்
தங்களின் வரவு நல்வரவாகி
தொடருக கருத்துகளின் அணி!
நட்புடன்
- லோகா -
Wednesday, March 22, 2006 11:13:00 AM
தங்களின் கவிதை ஆர்வம் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி. தொடர்ந்து வருக.
கடந்தவையில்
- மாதங்களுக்கும் -
முடிந்தால் சென்று
கவி
பருகி வருக..
நட்புடன்
-லோகா -
Wednesday, October 04, 2006 4:20:00 PM
Post a Comment
<< Home