எண்ணங்களின் எழுத்துரு...

Monday, May 01, 2006

தொடர்கதையோ...

குப்பை கொட்டுமிடத்தில்
குப்புற ஒரு பிணம்

மரப் பற்றைக்குள்
மங்கையின் வெற்றுடல்

யார் பெற்ற பிள்ளையோ?
யார் செய்த வேலையோ?

ஐபிகே வந்தென்ன?
அரசாங்கம் ஆண்டென்ன?

தொடரும் படுகொலை
நாளைக்கு யார்தலை?

வழமைக்கு திரும்பிய
யாழ்ப்பாணம் இதுவன்றோ?

வழுக்கையாற்றில் பாய்வது - நம்
செங் குருதியோ...!

"சஞ்சீவி" ( வாரஇதழ் 1999) (யாழ். இலங்கை)

- லோகா -

1 Comments:

Blogger சுதேசன் said...

அழகிய கவியில் அவலமான யாழ்வாழ்க்கையைப்
படைத்தமைக்கு நன்றிகள், தொடருங்கள்....

Friday, June 09, 2006 9:34:00 PM

 

Post a Comment

<< Home