தொடர்கதையோ...
குப்பை கொட்டுமிடத்தில்
குப்புற ஒரு பிணம்
மரப் பற்றைக்குள்
மங்கையின் வெற்றுடல்
யார் பெற்ற பிள்ளையோ?
யார் செய்த வேலையோ?
ஐபிகே வந்தென்ன?
அரசாங்கம் ஆண்டென்ன?
தொடரும் படுகொலை
நாளைக்கு யார்தலை?
வழமைக்கு திரும்பிய
யாழ்ப்பாணம் இதுவன்றோ?
வழுக்கையாற்றில் பாய்வது - நம்
செங் குருதியோ...!
"சஞ்சீவி" ( வாரஇதழ் 1999) (யாழ். இலங்கை)
- லோகா -
1 Comments:
அழகிய கவியில் அவலமான யாழ்வாழ்க்கையைப்
படைத்தமைக்கு நன்றிகள், தொடருங்கள்....
Friday, June 09, 2006 9:34:00 PM
Post a Comment
<< Home