எண்ணங்களின் எழுத்துரு...

Friday, May 12, 2006

கவலையில்லா மனிதன்

பிடித்து விட்டேன் - மடக்கி
பிடித்து விட்டேன்
சந்தோசம் - அளவு கடந்த
சந்தோசம்
இனி
வயலிற்குள் போனால் என்ன
வாய்க்காலிற்குள் போனால் என்ன
ஐந்தாறு வருடத்திற்கு - கால்
ஆட்டிக்கொண்டு உண்டிடுவேன்
அடுத்தடுத்த சந்ததிக்கு
ஆனந்தமாய் சேர்த்து வைப்பேன்
என்ன என்ன சொன்னேன்
இன்றே மறந்துவிட்டேன்
மறந்தது தான் நல்லது
அவாகள் அழுதால் என்ன
அழிந்தால் என்ன - நான்
கவலையில்லா - மனிதன்
கவலையில்லா - மனிதன்!

"சுடர்ஒளி" வாரஇதழ் (2003)

- லோகா -

0 Comments:

Post a Comment

<< Home