எண்ணங்களின் எழுத்துரு...

Wednesday, September 06, 2006

முற்றத்தில் குற்றிய முற்கள் (முள்- 01)

எப்படியும் இன்றதைப்
பார்த்திடவேண்டும்
ஐந்தரை மணிக்கே
லீவெடுக்கவேண்டும்
ஐந்து நிமிடம் பிந்தினாலும்
அடுத்த ரயில்
அரைமணிக்குப் பிறகுதான்

எட்டுக்கு வீடேகி
செய்தி முடிந்திட
செவ்வி வரும்
கட்டாயம் பார்க்கணும் - தவறின்
வரலாற்றுச் செவ்வியை
காணமுடியாப் பாவி நான்

இன்று காலையில்
ஏதோவொரு வேகத்தில்
நிகழ்ச்சி நிரல் பார்த்ததில்
மனநெருடல் தொடக்கம்

வேலை நாளில்- எனது
எட்டுமணி நேரத்தில்
இந்த நிகழ்ச்சியை
எப்படிப் பார்ப்பது
எப்படியும் பார்ப்பது

முடிவு எடுத்தாலும்
முடியுமா என்றது
கேட்டாலும் முந்தி விட
முதலாளி ஓமாமோ..

கத்தினான் கடுமையாய்
செப்பினான் ஜேர்மனில்
காதைப் பொத்தியும்
நெஞ்சைச் சுட்டது வார்த்தைகள்

வரலாற்றுக்காக உயிர் போக்கிய
வரலாற்றுச் செவ்வி காணும் வெறிக்கு
வாயப் பேச்சு என்ன செய்யும்
வன்செல்லும் புல்லாகும்

தாங்கினேன் -வேலையை
தயங்காது முடித்தேன்
பாய்ந்தடித்து ரெயில் பிடித்து
படபடக்க ஓடி வந்தேன்

இன்று மட்டும்
வீடு ஏதோ விசேடமாய்ப்பட்டது
காற்றும் குளிரும்
மனதைத் தொட்டது

தொலைக்காட்சி நிலையத்திற்கு
நன்றியைக் கொட்டணும்
நல்ல நிகழ்ச்சி போடுவதற்காய்
நல்லாசி கூறணும்

கதவை திறந்தேன்
உள்ளே புகுந்தேன்
கவலை பறந்தது
தொடங்கவில்லை
கழற்றா உடுப்புடன்
கதிரையில் விழுந்தேன்

இரண்டு நிமிடம்
ஒரு நிமிடம்
ஆகா
நிகழ்ச்சி ஆரம்பம்

வணக்கம்

இவங்களுக்கு வேற வேலையில்லை
ஒழுங்கான நிகழ்ச்சியைப் போர்றதில்லை
ஓலைகள் நாடகம் இண்டைக்கில்லை

எடுத்த
சம்பிகை கொப்பி
நம்பர் நாப்பத்தொன்பது

பார்த்து முடிக்கோணும்
அடுத்த
கொப்பி எடுக்கோணும்
நாளைக்கே மாத்தோணும்
அதனால்
அதனைப் பார்ப்போம்

எடுக்கப்பட்ட முடிவினை
எதிர்க்க முடியல்லை
எதிர்த்து கதைத்திட
என்னால் முடியவில்லை
கனவுகள் எல்லாம் மெய்ப்பதில்லை
அன்று மனம் அடைந்ததைப் போல்
துயரம்..
முடியவில்லை!

" ஊசிஇலை" மார்கழி 2003 ( சுவிஸ்)

- லோகா -

1 Comments:

Blogger LoKa said...

அன்பு தோழி தயாவிற்காவது விளங்கியதே உண்மை+ கவிதை. நன்றி தோழி.மகிழ்ச்சி!

Wednesday, October 04, 2006 3:44:00 PM

 

Post a Comment

<< Home