எண்ணங்களின் எழுத்துரு...

Monday, December 31, 2007

நன்றியுடன் வணக்கம்!



இணையத்தளம் காண வந்த தங்களுக்கு..
நன்றியுடன் வணக்கம்!

எழுத்தும் ஒப்பனையும்
என் இரு கண்களாகி...
மெல்ல மெல்ல நடைபயின்றும்
மேனியெல்லாம் ரணமடைந்தும்..
மேல்நிலையை எட்டுதற்காய்
மேடைகளை தேடுகிறேன்..

இலட்சியங்களை எட்டுதல் தான்
நிறைவான வாழ்க்கை..
எட்டுதலுக்கு எத்தனித்தல் - இது
என் வாழ்க்கை..

என்னுடன் கைகொடுக்கும்
உள்ளங்கள் அத்தனைக்கும்
இணைந்திருக்கும் உங்களுக்கும்
மீண்டும் நவில்கிறேன்..
நன்றியுடன் வணக்கம்!

-லோகா-

5 Comments:

Blogger U.P.Tharsan said...

அடடா அரம்பிச்சிட்டாங்கையா அரம்பிச்சிட்டாங்க. :-)) ம்... தொடர்ந்து எழுதும் Loka. தமிழ்மணத்தில் இணைப்பதைப்பற்றி ஒரு மின்னஞ்சல் போடுகிறேன். அதற்குமுதல் 2 அல்லது 3 Post எழுதுங்கோ சாமி. :-))

Monday, November 21, 2005 4:53:00 AM

 
Anonymous Anonymous said...

//என்னுடன் கைகொடுக்கும்
உள்ளங்கள் அத்தனைக்கும்
இணைந்திருக்கும் உங்களுக்கும்
மீண்டும் நவில்கிறேன்..
நன்றியுடன் வணக்கம்//

நாங்கள் கைகொடுக்காமல்
வேறயாரு கைகொடுக்கிறது தமிழனே ஹா?
:-)
அழகான சிந்தனைகள் உங்களுக்கு
தொடர்ந்து எழுதுங்கள்

நேசமுடன்..
-நித்தியா

Monday, March 20, 2006 12:54:00 AM

 
Blogger LoKa said...

ஆர்வத்துடன் வந்திணைந்து ஆரோக்கியமான கருத்தளிக்கும்
நண்பி நித்தியா தங்களுக்கும்
இலத்திரனியல் வழியில் தொடர்ந்தும்
எனை இணையத் தளத்திற்கு இழுத்துவரும் நண்பன் தருசனுக்கும் நன்றியுடன் மீண்டும்
வரவேற்பு வணக்கம்!

நட்புடன்
-லோகா -

Wednesday, March 22, 2006 11:08:00 AM

 
Blogger U.P.Tharsan said...

அதுசரி முதலிலே வாரவேற்றது நான். அது என்ன உங்களுக்கு முதலில் நித்தியாவை தெரிந்திருக்கிறது. அதன்பின்தான் தர்சன் தெரிந்தார்போலும். :-(( சரி சரி

முதலில் Ronan Jimson போடுவதுபோன்ற விளம்பர பின்னூட்டல்களை தவிர்க்க மறுமெழி மட்டுறுத்தல் செய்வது அவசியம் அன்பரே. இல்லாட்டி தமிழ்மணத்திற்குள்ளே விடவே மாட்டார்கள்.

Wednesday, August 30, 2006 5:35:00 PM

 
Blogger LoKa said...

வலைப் பூவிற்குள்
வந்து சென்றாலும்
வாழ்த்தி ஊக்கமளிக்க
எல்லையற்ற மனம் வேண்டும்!
அவ்வகையில்..
புதிதாக வரவேற்கும்
அன்புத் தோழி தயாவிற்கும்
நன்றியுடன் மீண்டும்
வரவேற்பு வணக்கம்!

நட்புடன்
-லோகா -

Wednesday, October 04, 2006 3:51:00 PM

 

Post a Comment

<< Home