எண்ணங்களின் எழுத்துரு...

Friday, May 12, 2006

கவலையில்லா மனிதன்

பிடித்து விட்டேன் - மடக்கி
பிடித்து விட்டேன்
சந்தோசம் - அளவு கடந்த
சந்தோசம்
இனி
வயலிற்குள் போனால் என்ன
வாய்க்காலிற்குள் போனால் என்ன
ஐந்தாறு வருடத்திற்கு - கால்
ஆட்டிக்கொண்டு உண்டிடுவேன்
அடுத்தடுத்த சந்ததிக்கு
ஆனந்தமாய் சேர்த்து வைப்பேன்
என்ன என்ன சொன்னேன்
இன்றே மறந்துவிட்டேன்
மறந்தது தான் நல்லது
அவாகள் அழுதால் என்ன
அழிந்தால் என்ன - நான்
கவலையில்லா - மனிதன்
கவலையில்லா - மனிதன்!

"சுடர்ஒளி" வாரஇதழ் (2003)

- லோகா -

Monday, May 01, 2006

தொடர்கதையோ...

குப்பை கொட்டுமிடத்தில்
குப்புற ஒரு பிணம்

மரப் பற்றைக்குள்
மங்கையின் வெற்றுடல்

யார் பெற்ற பிள்ளையோ?
யார் செய்த வேலையோ?

ஐபிகே வந்தென்ன?
அரசாங்கம் ஆண்டென்ன?

தொடரும் படுகொலை
நாளைக்கு யார்தலை?

வழமைக்கு திரும்பிய
யாழ்ப்பாணம் இதுவன்றோ?

வழுக்கையாற்றில் பாய்வது - நம்
செங் குருதியோ...!

"சஞ்சீவி" ( வாரஇதழ் 1999) (யாழ். இலங்கை)

- லோகா -

ஆவர்த்தண அட்டவணை

மெண்டலீவ்
தயாரித்துமென்ன
மோஸ்லி
பாகுபடுத்தியென்ன
பெண்களின் மனதை
பகுத்தறிய முடியலியே!

"சஞ்சீவி" வாரஇதழ் 1999 (யாழ். இலங்கை)

- லோகா -