எண்ணங்களின் எழுத்துரு...

Monday, February 05, 2007

அராஜகம்!


எலும்பு உருக்கி
கொல்லுதல் போதவில்லையாம்-
கூரை பிரிக்கிறது
கொடியவர்களின் அராஜகம்!

- லோகா -
"தமிழ்கவிதை" தளத்தின் கவிதைப்போட்டிக்காக (02) தரப்பட்ட படத்திற்கு எழுதப்பட்டது.

தைப்பொங்கல்...

கரும்பு கட்டி
விறகு அடிக்கி
கோலம் போட்ட
காலம்..
இறந்த காலம்!

இந்த குளிர்தேச
வாழ்வில்
எமக்கு
பிறேம்போட்ட புகைப்படமே
நிகழ்காலம்!

- லோகா -

"தமிழ்கவிதை" தளத்தின் கவிதைப்போட்டி 01 இல் தரப்பட்ட படத்தி்ற்காக எழுதப்பட்டது.